தேர்தல்









முதலில் தேதி வரும் !


பின்னால் ஓலையிட்டு

தெரு தெருவாய் நரிகள் வரும் !

கூடவே வாலாட்டி நாய்களும் வரும் !


ஒரு கூட்டம்

விலை போகி இறையாக

சிறு முயலாகும் !


அப்பாவி

பெருங்கூட்டம்

வீண் பேசி இணையத்தில்

வாள் வீசும் !


ஒலி பெருக்கி

ஓய்வில்லாமல் ஊரெல்லாம்

பொய் பெருக்கும் !


கரை வேட்டி

கைக்குழந்தைகள்

புரிந்தாலும் புரியாமல்

புகழ்பாடும் !


தேர்தல்

அறம் கொண்டு

இழுக்க வேண்டி நிற்கும்

பெருங்களிராகும் !


அதை

செய்து முடிக்க

ஒரே ஒரு விரல் போதும் !


No comments: