Tuesday 25 November 2008

மழையால் எத்தனை மகிழ்ச்சி!







உரு
ண்டோடிய
மேகமெல்லாம்
இளைப்பாறிய நேரத்தில் - சுரந்த
வியர்வை துளியெல்லாம்
மண்ணை தொட்டுவிட்டது
மழைத்துளியாய்............

இவன் பூமி இறங்கிய
மகிழ்ச்சியில் மலர்ந்தது
மலர் மட்டுமல்ல மண்ணும் தான்
மலராமல் இப்படி மணக்குமா?

சந்தோசத்தில்
தென்றல் தெருவெல்லாம்
பரப்புகிறது இவன் வந்த சேதியை

இவன் பாதம் தொட்ட
பாதையெல்லாம்
பசுமை படர்ந்து போகையால்
வறட்சியெல்லாம் வறண்டேபோகிறது

சொட்டு சொட்டு என்ற
இவன் சங்கீதம் கேட்டு-மண்ணில்
புதைந்திருந்த விதையெல்லாம்
புதுதளிர் விட்டு சிரிக்கிறது

விதவையாய் இருந்த ஓடையெல்லாம்
இவன் வந்த பொழுதிலிருந்து-இன்று
மணம்புரிந்த பாவையாய்
சல சலக்கிறது மகிழ்ச்சியில்

கரும்பாறையோ கொஞ்சம் கலங்குகிறது
இவன் தொட்ட சுகத்தில் - எங்கு
தன்னை மறந்து கரைந்திடுவோமோ என்று.....

இவனிடம் நனைந்த மயக்கத்தில்
உயிர்களும் பொழுதுகளும்
உறங்கியே கிடக்கிறது-இவன்
சென்ற நேரம் கூட தெரியாமல்...

விழித்திடுமா அவைகள்?

Sunday 2 November 2008

இரயிலோடு பயணங்களில்









மக்கள்
கூட்டம் ஆர்ப்பரிக்கிறது
தெய்வத்தைக் கண்ட
திருவிழாக் கூட்டமாய்
இவன் நிற்க்கும் இடம்மெல்லாம்..........

ஆர்ப்பரிக்கும் மக்கள் கூட்டத்தை
இவன் அன்போடு அனைக்கும் போது
என் பார்வையில் - ஒரு
அன்னையாகவே அறியப்பட்டான்

தண்டவாளத்தோடு இவன்
மீட்டும் இசையினிலே
இருபுறமும் மரங்களெல்லாம்
கைகோர்த்து செல்கிறது பின்னோக்கி

குயிலுக்கு குருவாக இருப்பானோ
வழியெல்லாம் கூவி கூவியே
குதுகலிக்கிறான்....

குயில்பாட்டு மட்டுமல்ல தாலாட்டும்தான்
உலகத்து முதற்தாயிற்க்கு - இறைவன்
தாலாட்டு கற்ப்பிக்கும் பொழுது
உடன் இருந்திருப்பான் போலிருக்கு

இவன் உற்சாகத்திற்க்கு
உரம் போட்டவன் அதில்
ஒரு துளியை
எனக்கு தரமான்டானோ?

இவன் தேகம் தொட தான்
எத்தனை பேருக்கு ஆசை

காடோடும் காற்றெல்லாம்
இவனை தழுவியே செல்கிறது

பெய்யும் மழையெல்லாம்
இவனை நனைப்பதற்க்கே
பெய்கிறது.......

வானத்தில்
மிதக்கும் மேகமெல்லாம்
இவன் முதுகேற துடுக்கிறது

இவன் மடியிறங்க
எவருக்குத்தான் மனமுண்டு
எனக்கும் ஒருதுளி கூட இல்லை
கண்மூடி கொண்டு சந்தோசத்தின்
கரையேறிவிட்டேன்........

இறுதிவரை ஜன்னல் வழிவந்து
தேடிய தென்றலின் தேடல்
காரணம் தான் தெரியவில்லை....................

Tuesday 14 October 2008

அம்மா....








உன்
நிழல் தான்
என் முதல் உலகம்
அதில்
உன் முகம் தான்
நான் பார்த்த முதல் நிலவு

நீ தந்த
முதல் முத்ததிலிருந்து தான்
என் இதயமே
இயங்க ஆரம்பித்தது

எனக்கு
பஞ்சு தொட்டில்கள் கூட
முற்ட்தொட்டிலாக தான் தெரிந்தது
உன் மடியை தேடிய பொழுது

நான் கேட்ட
முதல் மொழி - உன்
விழி பேசிய கன்மொழி தான்

நான் மட்டும் பிறந்தன்றே
வீணைகளெல்லாம் மீட்டுவிட்டேன்
உன் விரல்களிலே....

உன் முகம் தொட்ட
பொழுதிலிருந்து தான் புரிந்துகொண்டேன்
பூக்கள் மென்மையானவை இல்லை என்பதை.....

அதுமட்டுமல்ல- உன்
முச்சுகாற்றில் மோதிய காற்று தான்
தெருவெல்லாம் தென்றலாக ஓடுகிறது

உன் முயற்ச்சியை பார்த்த
இறைவனே - ஒரு
நிமிடம் திகைத்துவிட்டான்
நடக்க வைத்த என்னை -எங்கு
பறக்க வைத்து விடுவாயோ என்று

மொத்தத்தில்
அன்பிற்க்கு கடவுள் அமைத்த
ஆலயம் தான் நீ அம்மா

Thursday 9 October 2008

தூக்கம் வரவில்லை

தூக்கம்
என்னை மறந்து
தூங்கிவிட்டது
தூக்கம் வரவில்லை..........

Tuesday 7 October 2008

நல்ல உறவுகள்


நல்ல உறவுகள்
உறுதிப்படுத்தப்படுகிறது
சுபநிகழ்ச்சி மொய்ஏட்டை பார்த்து

Saturday 27 September 2008

மூன்று நொடியில் மூன்று வருடங்கள்







பயணத்தின் முடிவில் அமர்ந்து
முன்று வருடத்தை மெதுவாக
முணுமுணுக்கிறேன் .............

அங்கும் இங்கும் ஓடி
இறுதியில் -இந்த
முன்று வருட பயணத்தில்
முச்சு வாங்க ஏறினோம்

புதிதல்லவா
ஒருவர் முகம் ஒருவர் பார்த்து
வினாக்குரியை வரைந்து கொண்டோம்
தெரிந்த முகம் என்றால் -அது
கண்ணாடியில் மட்டும் தான்

கண்கள் மட்டும் பேசிக்கொண்டிருந்தபோது
வார்த்தை கனைகளை தொடுத்து
மௌன கதைகளை களைத்தோம்

குண்டு ஊசி விழுந்தால்
சத்தம் கேட்க்கும் என்றிருந்த பயணத்தில்
இப்பொழுது
குண்டு விழுந்தால் கூட கேட்ப்பதிலை

நாட்கள் நட்புடன்
நடை போடுவதை பார்த்து
நாற்காலிக்கும் நாடி துடித்தது

இப்படியே
முதல் ஆண்டு
முகம் பார்த்தே முடிந்துவிட்டது

இரண்டாம் ஆண்டு என்று
சிறியதாக உடல் சிலிர்த்ததில்
சீனியர் என சீறிக் கொண்டோம்

இப்பொழுது தான்
காலவனும் தன் கடிகார முட்களை
வேகமாக சுழற்ற ஆரம்பித்தான்

தேர்வு பயம்மெல்லாம்
திமிராய் மாறியது.....

இன்னும் இருக்கும்
ஒரு வருடத்தை எட்டிபார்த்துக்கொண்டு
இளைப்பாறினோம்

எங்கள் சங்க கூட்டங்கள்
காலங்களை களவாட ஆரம்பித்தது
இரண்டாம் ஆண்டும் இறுதியானது

மூன்றாம் வருடம்
மூத்தவன் என்று கூறி
மனதில் வயதை குறைத்துக்கொண்டோம்

எங்கள் நிழல்களில்
மீதிப்பவரிடம் கூட
மீசையை முறுக்கி கொண்டோம்

வாழ்க்கையில் முன்ணேறுவதாக
சொல்லிக்கொண்டு -வாகனத்தில்
மட்டும் தான் முன்னே ஏறினோம்

இறுதியில்......................................

மூன்று வருடத்திற்க்கு
பிரிவு உபச்சார விழா என்னும்
மூன்று மணி நேர விழாவில்
முற்று புள்ளி வைக்கப்பட்டுவிட்டது
--------------------------------------

அமைதி

நுலகத்தில் ஒரே பேச்சு
பேசுபவர் பெயர்
அமைதி

மரணபயம்

கோவில் திருவிழாவில்
சீரியல்களோடு சிறைபிடிப்பு
மரணபயத்தில்
மரங்கள் ...............

Thursday 25 September 2008

இலையுதிர்க்காலம்


மரங்ளெல்லாம்
ஒன்றாய்
நிர்வாண ப்போராட்டம்
இலையுதிர்க்காம்...........

குக்கர்


ந்வன் என்று தான்
தீயிலீட்டரோ என்னவோ
தீயிலும் மூச்சிவிட முயலுகிறான்
சமறையில் குக்கர்

சிலைகள்


தலைவர்களே
உங்கள் ப்பை நம்பாமல்
உயிர்வரும் என காத்திருக்கிறோம் 
உடல்களோடு
ரெங்கிலும் சிலைகள்

தீயின் தீக்கனவு


கனவுகள் கன்டனரே
அதை கரிக்கினாயே- உன்
கனவு இதுதானோ!

கடிகாரம்


றப்பே ல்லாமல்
இரவையும் பகலையும்-ளிதாய்
புரட்டிப்போட்டுக் கொண்டிருக்கும்
புரட்சியான்!

புலம்பல்


நம்ப வைத்து
கழுத்தை அறுத்துவிட்டன்ர்
புலம்புகிறது
நெற்பயிர்

சாக்பீஸ்


அறியாமை அகல
தினமும் போராடி உயிர்விடும்
கிம்சைவா திகள்
சாக்பீஸ்