மழையால் எத்தனை மகிழ்ச்சி!








உருண்டோடிய மேகமெல்லாம்
இளைப்பாறிய நேரத்தில் - சுரந்த
வியர்வை துளியெல்லாம்
மண்ணை தொட்டுவிட்டது
மழைத்துளியாய்............


இவன் பூமி இறங்கிய
மகிழ்ச்சியில் மலர்ந்தது
மலர் மட்டுமல்ல மண்ணும் தான்
மலராமல் இப்படி மணக்குமா?

சந்தோசத்தில்
தென்றல் தெருவெல்லாம்
பரப்புகிறது இவன் வந்த சேதியை

இவன் பாதம் தொட்ட
பாதையெல்லாம்
பசுமை படர்ந்து போகையால்
வறட்சியெல்லாம் வறண்டேபோகிறது

சொட்டு சொட்டு என்ற
இவன் சங்கீதம் கேட்டு-மண்ணில்
புதைந்திருந்த விதையெல்லாம்
புதுதளிர் விட்டு சிரிக்கிறது

விதவையாய் இருந்த ஓடையெல்லாம்
இவன் வந்த பொழுதிலிருந்து-இன்று
மணம்புரிந்த பாவையாய்
சல சலக்கிறது மகிழ்ச்சியில்

கரும்பாறையோ கொஞ்சம் கலங்குகிறது
இவன் தொட்ட சுகத்தில் - எங்கு
தன்னை மறந்து கரைந்திடுவோமோ என்று.....

இவனிடம் நனைந்த மயக்கத்தில்
உயிர்களும் பொழுதுகளும்
உறங்கியே கிடக்கிறது-இவன்
சென்ற நேரம் கூட தெரியாமல்...

விழித்திடுமா அவைகள்?

இரயிலோடு பயணங்களில்










மக்கள் கூட்டம் ஆர்ப்பரிக்கிறது
தெய்வத்தைக் கண்ட
திருவிழாக் கூட்டமாய்
இவன் நிற்க்கும் இடம்மெல்லாம்..........

ஆர்ப்பரிக்கும் மக்கள் கூட்டத்தை
இவன் அன்போடு அனைக்கும் போது
என் பார்வையில் - ஒரு
அன்னையாகவே அறியப்பட்டான்

தண்டவாளத்தோடு இவன்
மீட்டும் இசையினிலே
இருபுறமும் மரங்களெல்லாம்
கைகோர்த்து செல்கிறது பின்னோக்கி

குயிலுக்கு குருவாக இருப்பானோ
வழியெல்லாம் கூவி கூவியே
குதுகலிக்கிறான்....

உலகத்து முதற்தாயிற்க்கு
தாலாட்டு கற்ப்பிக்கும் பொழுது
உடன் இருந்திருப்பான் போலிருக்கு

இவன் உற்சாகத்திற்க்கு
உரம் போட்டவன் அதில்
ஒரு துளியை
எனக்கு தரமான்டானோ?

வானத்தில்
மிதக்கும் மேகமெல்லாம்
இவன் முதுகேற துடுக்கிறது

இவன் மடியிறங்க
எவருக்குத்தான் மனமுண்டு
எனக்கும் ஒருதுளி கூட இல்லை
கண்மூடி கொண்டு சந்தோசத்தின்
கரையேறிவிட்டேன்........

இறுதிவரை ஜன்னல் வழிவந்து
தேடிய தென்றலின் தேடல்
காரணம் தான் தெரியவில்லை....................